Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய செய்தித்தாள், செய்தி நிறுவன ஊழியர் அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுச்செயலாளராக பூபதி தேர்வு

அக்டோபர் 24, 2021 02:14

சென்னை, அக்.25: தேசிய செய்தித்தாள் மற்றும் செய்தி நிறுவன ஊழியர் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவராக ஜி.பூபதி தேர்வாகியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளது இதுவே முதல்முறையாகும்.

தேசிய செய்தித்தாள் மற்றும் செய்தி நிறுவன ஊழியர் அமைப்புகளின் கூட்டமைப்பின் (National Confederation of Newspapers and News Agency Employee's Organisations) தேசிய செயற்குழு கூட்டம் அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளராக சென்னையைச் சேர்ந்த ஜி.பூபதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  தேசிய செயற்குழுவின் தலைவராக இந்துகாந்த் தீட்சித், உத்தரப்பிரதேச உழைக்கும் பத்திரிகையாளர்  சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் பிரேம்காந்த் திவாரி, கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

43 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த கூட்டமைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்வு  செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தேசிய செயற்குழு கூட்டத்தை டிசம்பர் மூன்றாவது வாரத்தில்  சென்னையில் கூட்டுவது என்றும், அதற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் பூபதி மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில்  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

லக்னோ மாநகரில் உள்ள உத்திரப்பிரதேச பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில், கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படும் என்று  தேசிய செயற்குழு முடிவெடுத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்